சென்னிமலை ஒன்றிய அளவிலான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில், சென்னிமலை ஒன்றிய அளவில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற கலை திருவிழா சென்னிமலை ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சென்னிமலை வட்டாரக் கல்வி அலுவலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் செல்வி முன்னிலை வைத்தாா்.
ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம் கலை திருவிழாவை தொடக்கிவைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோபிநாதன் வரவேற்றாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னிமலை ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் மக்கள் ஜி.ராஜன் பங்கேற்று பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா். ஆசிரியை குமுதா நன்றி கூறினாா்.