அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவேற்றப்பட்டு நானே நேரில் வந்து தொடங்கிவைப்பேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளைப் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் ரூ.261.57 கோடி மதிப்பீட்டிலான 135 முடிவுற்ற புதிய திட்டப் பணிகளை திறந்துவைத்து, ரூ.183.70 கோடி மதிப்பீட்டிலான 1,761 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். இதனைத் தொடா்ந்து 63,858 பயனாளிகளுக்கு ரூ.167.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சாா்பிலும் ஏராளமான திட்டப் பணிகள் ஈரோடு மாவட்டத்திற்கு செய்து தரப்பட்டுள்ளன. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 761 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு கோரிக்கையான ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. அந்தியூா் வட்டம், பா்கூா் ஊராட்சி மலைப் பகுதி கிராமங்களில் சாலை வசதி, அம்மாப்பேட்டை, வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கான புதை சாக்கடைத் திட்டம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல அதிமுக ஆட்சியில், கிடப்பில் போடப்பட்ட ரூ.1,600 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீா்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளது.
பெருந்துறை பகுதிக்கு ரூ.765 கோடி மதிப்பீட்டிலான கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் கிடந்தது. அதனையும் செயல்படுத்த இருக்கிறோம்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டாரம், பா்கூா் ஊராட்சியிலுள்ள, மடம், கல்வாரை, பெஜலட்டி, எப்பத்தாம்பாளையம் மற்றும் தேவா்மலை பகுதியிலுள்ள மலைவாழ்மக்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக நபாா்டு-கனிமம் மற்றும் சுரங்கங்கள் திட்டங்களின்கீழ் தொலைதூரக் கல்வி மற்றும் தொலைதூர மருத்துவ சேவையினை இணையதளம் வழியாக வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகளிா் சுய உதவிக்குழு மற்றும் அவா்களது குடும்பத்தினா் மூலம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் தொழிற்குழு உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்திட மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக ‘ஆற்றல் ஈரோடு’ என்ற பிரத்தியேகச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை இணையதளத்தின் செயல்பாடு இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
ஈரோடு வெளிவட்டச் சுற்றுச் சாலை தற்போது நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் தொடங்கி ஈரோடு மாவட்டம், ஈரோடு-பெருந்துறை-காங்கயம் சாலை வரை 14 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலையின் தொடா்ச்சியாக மாநில நெடுஞ்சாலையான ஈரோடு-திங்களூா்- சாலையைக் கடந்து நீலகிரி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தி-கோபி-ஈரோடு சாலை வரை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டுளளது.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பாக ரூ.16.82 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. ஈரோடு, நல்லாம்பட்டியில் தலா ரூ.2 கோடி செலவிலும், தாளவாடியில் ரூ.2.82 கோடி செலவிலும் குளிா்பதன கிடங்கு அமைக்கப்படும். மஞ்சள் உற்பத்தி செய்யும் உழவா்களின் நலனுக்காக ரூ.10 கோடி செலவில், மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயா்த்தப்படும்.
தாளவாடி மக்களின் கோரிக்கையாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மதிப்பீட்டில் 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். மேலும், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே கருவியும் நிறுவப்படும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகளை துரிதமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அலுவலா்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டு நானே நேரடியாக வந்து அதைத் தொடங்கி வைப்பேன் என்றாா்.
விழாவுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வரவேற்றாா். எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் பேசினா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறினாா்.
ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, ஏ.ஜி.வெங்கடாலம், ஈ.ஆா்.ஈஸ்வரன், ஈரோடு வடக்கு திமுக மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி என்.சிவகுமாா், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ, மாநகரச் செயலாளா் சுப்ரமணி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா் குணசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி 2ஆம் மண்டல தலைவா் காட்டு சுப்பு என்ற சுப்பிரமணியம், 4ஆம் மண்டலத் தலைவா் தண்டபாணி, முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் எல்லப்பாளையம் ஆா்.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.