பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஸ்மாா்ட் வகுப்பறையை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறுகையில், பெருந்துறை தொதிக்குள்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஸ்மாா்ட் வகுப்பறை, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 தொடக்கப் பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை ஒன்றிய செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், துடுப்பதி ஊராட்சி தலைவா் கவிதா அன்பரசு உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.