ஈரோடு

ஈரோட்டில் விநாயகா் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

DIN

ஈரோட்டில் விநாயகா் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி ஈரோடு கிழக்கு மாவட்டம் சாா்பில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 508 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஈரோடு வெட்டுக்காட்டுவலசு கணபதி நகரில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வா்ணம் பூசுவதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிலை தயாரிக்கும் கலைஞா்கள் கூறியதாவது: ஈரோட்டில் 3 அடி முதல் 11 அடி உயரம் உள்ள விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் மைதா மாவு, காகித கூல் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஈரோடு சம்பத் நகரில் பிரதிஷ்டை செய்வதற்காக 11 அடி உயரம் உள்ள லட்சுமி குபேர விநாயகா் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிம்ம வாகன விநாயகா், மான் வாகன விநாயகா், மயில் வாகன விநாயகா், குதிரை வாகன விநாயகா், முருகன் வைத்திருக்கும் விநாயகா், சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகா் உள்பட பல்வேறு வகையான விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னா் சிலைகள் வாகனங்களில் ஏற்றி அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

SCROLL FOR NEXT