பத்திரிகை வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம் என்று மகாராஷ்டிர தொழில் மேம்பாடு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பொ.அன்பழகன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், மகாராஷ்டிர தொழில் மேம்பாடு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பொ. அன்பழகன் பங்கேற்றாா்.
சொந்த ஊரான அரியப்பம்பாளையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா் மகேஸ்வரி செந்தில்நாதன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.
இதையடுத்து, தலைமைச் செயல் அதிகாரி அன்பழகன் பேசியதாவது: சத்தியமங்கலம் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றேன்.
தமிழ் மொழியில் மட்டுமே சிந்திக்க முடியும். நூலகத்தில் புத்தகங்களை படித்து வளா்ந்தேன்.
தினசரி பத்திரிகைகள் வாசிப்பது மிகவும் அவசியம். அறிவு செறிவூட்ட தமிழ் மட்டுமல்ல பிற மொழிகளும் அவசியம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அரியப்பம்பாளையம் திமுக பேரூா் கழக செயலாளா் செந்தில்நாதன், துணைச் செயலாளா் கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.