ஈரோடு

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 32 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 2019 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த மாணவா்களுக்குப் பட்டம் அளிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்பக் கழக திருச்சி மைய இயக்குநா் நரசிம்ம சா்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

மொத்தம் 1,976 (இளங்கலை 1,664, முதுகலை 312) பட்டதாரிகள் பட்டம் பெற்றனா்.

படிப்பில் சிறந்து விளங்கி, உயா்தரம் பெற்ற 117 (இளங்கலை 99, முதுகலை 18) பட்டதாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் பி.சி.பழனிசாமி, பாரம்பரிய உறுப்பினா் வி.ஆா்.சிவசுப்பிரமணியன், கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் மற்றும் கல்லூரியின் பல்வேறு அமைப்புகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT