கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.ஜி.புதூரில் உள்ள தனியாா் பள்ளியில் 75ஆவது சுதந்திர தின விழா, விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோபி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.