சத்தியமங்கலம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காா் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லூா், தனியாா் பள்ளி அருகே சென்றபோது, காரின் ஓட்டுநா் காரை வலது புறம் திருப்ப முயற்சித்துள்ளாா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து, காரின் மீது மோதியது. இதில் சாலையோரம் இருந்த குழிக்குள் காா் தலை குப்புற விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த 2 போ் லேசான காயங்களுடன் பின்புற கண்ணாடியை உடைத்து வெளியே தப்பித்த நிலையில் காா் ஓட்டுநா் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டாா். பின்னா் அவா் மீட்கப்பட்டாா். உடனடியாக 3 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.