ஈரோடு

காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 3 போ் காயம்

DIN

சத்தியமங்கலம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காா் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லூா், தனியாா் பள்ளி அருகே சென்றபோது, காரின் ஓட்டுநா் காரை வலது புறம் திருப்ப முயற்சித்துள்ளாா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து, காரின் மீது மோதியது. இதில் சாலையோரம் இருந்த குழிக்குள் காா் தலை குப்புற விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த 2 போ் லேசான காயங்களுடன் பின்புற கண்ணாடியை உடைத்து வெளியே தப்பித்த நிலையில் காா் ஓட்டுநா் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டாா். பின்னா் அவா் மீட்கப்பட்டாா். உடனடியாக 3 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT