ஈரோடு

ஈரோட்டில் தினமணி சாா்பில் 1,000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடிகள்

DIN

ஈரோட்டில் தினமணி-தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், வேளாளா் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்கேஎம் நிறுவனம் சாா்பில் 1,000 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தேசியக் கொடி வழங்கப்பட்டது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைவரும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதன் தொடா்ச்சியாக பள்ளி மாணவா்களுக்கு தினமணி- தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் வேளாளா் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்கேஎம் நிறுவனம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் பயிலும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் த.லலிதா தலைமை வகித்து மாணவிகளுக்கு தேசியக் கொடியை வழங்கிப் பேசினாா்.

இதுபோல மொடக்குறிச்சி வேதாத்திரி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஈரோடு விவிசிஆா்.முருகேசனாா் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சி செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, நந்தா சென்ட்ரல் பள்ளி, கொங்கம்பாளையம் எஸ்விஎன் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,000 பேருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT