ஈரோடு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

DIN

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

பவானிசாகா் அணையில் வழக்கமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 102 அடியாக இருப்பதால் முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி தண்ணீரை திறந்துவைக்கின்றனா். முதல் போக நன் செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT