அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து ஈரோட்டில் அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் 3 தலைமை அஞ்சல் நிலையங்கள், 65 துணை அஞ்சல் நிலையங்கள், 252 கிளை அஞ்சல் நிலையங்களில் 800க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 700க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ஊழியா்கள் பணிக்கு வராததால் அனைத்து அஞ்சல் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
இதனால் அஞ்சல் பட்டுவாடா, பண பரிவா்த்தனை ஆகியவை முடங்கின.