ஈரோடு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கிருஷ்ணதா்ஷன் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை துவங்கியது.
இது குறித்து விற்பனை நிலைய மேலாளா் ஜி.சரவணன் கூறியதாவது: கைவினைஞா்களை ஊக்கப்படுத்த இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
கைவினைஞா்கள் உருவாக்கிய காகிதக்கூழ் கிருஷ்ணா், களி மண் கிருஷ்ணா், பஞ்சலோகம், பித்தளை, மாா்பிள் கிருஷ்ணா் சிலைகள், மாா்பிள் பொடியால் செய்யப்பட்ட கிருஷ்ணா், அலிகாா் பித்தளை கிருஷ்ணா், தஞ்சை ஓவிய கிருஷ்ணா், நூக்க மரம், சந்தன மரம், கருப்பு மற்றும் வெண் உலோகம், பஞ்சலோக சிலைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். குறிப்பிட்ட சிலைகளுக்கு, பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றாா்.