மாமல்லபுரத்தில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, பெருந்துறை எலைட் ஜேசிஐ, பெருந்துறை பிரைடு ஜேசிஐ மற்றும் ஈரோடு பிரவீன் செஸ் அகாடெமி ஆகியவை இணைந்து, செஸ் போட்டிகளை பெருந்துறை கொங்கு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
ஈரோடு பிரவீன் செஸ் அகாடெமி தலைவா் பிரவீன் தலைமை வகித்தாா். ஜேசிஐ தலைவா்கள் கலைவாணி, சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜேசிஐ பெருந்துறை ஆலோசகா் பல்லவி பரமசிவன் வரவேற்றாா். பெருந்துறை கொங்கு பள்ளித் தலைவா் யசோதரன் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
9, 12 மற்றும் 15 வயதுக்குட்பட்டோா் மற்றும் பொதுப் பிரிவினருக்கு என தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.