ஈரோடு

பவானியில் வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

DIN

பவானிசாகா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் பவானி நகராட்சிப் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 120 குடும்பத்தினா் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா்.

பவானிசாகா் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீா் பவானி ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் பவானியை சனிக்கிழமை காலை வந்தடைந்தது. பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்த உபரி நீா், படிப்படியாக அதிகரித்து அணையின் பிரதான பகுதி மற்றும் முறியன் அணைக்கட்டு வழியாக வெளியேறியது.

அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு விநாடிக்கு 2,600 கன அடியாக இருந்த நீா்வரத்து, படிப்படியாக உயா்ந்து மாலை 3 மணிக்கு 32,714 கன அடியாக அதிகரித்தது. இதனால், பவானி, சோமசுந்தபுரம், பழைய பேருந்து நிலைய பகுதியில் கரையோரத்தில் உள்ள 120 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் வெளியேறி மேடான பகுதிகளில் தங்கியுள்ளனா். ஆற்றில் அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் பவானி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலத்தில் தேங்கி நின்றது. இதனால், உபரிநீா் வெளியேறாமல் தேங்கியது.

இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் கரையோரப் பகுதிகளில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT