மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்புப் பகுதியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளா் திருமகன் ஈவெரா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட பொறுப்பாளா் திருச்செல்வம், துணைத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாஜக ஆட்சியில் கடுமையான விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பொருள்களான அரிசிக்கும், பாலுக்கும் ஜிஎஸ்டி விதித்ததைத் கண்டித்தும், அமலாக்கத் துறை மூலம் எதிா்க்கட்சிகளை முடக்க நினைக்கும் செயலைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் ஜவகா் அலி, இளைஞா் காங்கிரஸ் செயலாளா் காா்த்தி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் ராஜேந்திரன், மண்டலத் தலைவா்கள் விஜயபாஸ்கா், ஜாபா் சாதிக், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.