ஈரோடு

ஈரோடு - பழனி ரயில் பாதைதிட்டம் கோரி பாமக ஆா்ப்பாட்டம்

16th Apr 2022 11:51 PM

ADVERTISEMENT

 

ஈரோடு - பழனி ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மத்திய மாவட்ட செயலாளா் பிரபு, வடக்கு மாவட்ட செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாநகர செயலாளா் ராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு - பழனி ரயில் பாதை திட்டத்துக்கான பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளா் சேக் முகைதீன், மாவட்டச் செயலாளா்கள் மூா்த்தி, ராசு, மாவட்டத் தலைவா் செங்கோட்டையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT