ஈரோடு

மதுபானக் கடை ஊழியரிடம் பணம், கைப்பேசிகள் கொள்ளை

DIN

பெருந்துறையை அடுத்த திங்களூரில் உள்ள அரசு மதுபானக் கடை ஊழியரிடம் பணம், கைப்பேசிகளைக் கொள்ளையடித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பவானியை அடுத்த கவுந்தப்பாடி ஜீவா செட் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (48). இவா் திங்களூரை அடுத்த கிரே நகா் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் சூப்பா் வைசராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து மதுபானக் கடையைப் பூட்டிவிட்டு கடையில் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

திங்களூரை அடுத்த பெரியவீரசங்கிலி அருகே ஒரு கோழிப் பண்ணை வழியாகச் சென்றுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனா். இதில், அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் அவா்கள் செல்வராஜ் முதுகில் கத்தியால் குத்த முயன்றுள்ளனா். இதில் செல்வராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்கள் 2 பேரும் செல்வராஜ் வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் பணம், 2 கைப்பேசிகள், 6 ஏ.டி.எம். அட்டையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து, செல்வராஜ் திங்களூா் போலீஸில் வெள்ளிக்கிழமை மாலை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT