ஈரோடு

நீச்சல் போட்டி: தங்கம் வென்ற ஈரோடு மாணவி

DIN

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு அரசுப் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்தாா்.

தமிழ்நாடு அக்வாடிக் அசோசியேஷன் சாா்பில் 47ஆவது ஜூனியா் மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 600 போ் கலந்து கொண்டனா். நீச்சலில் டைவிங், பட்டா்பிளை, பிரஸ்ட் ஸ்டாக், பேக்ஸ்டாக் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் நீச்சல் டைவிங் விரைவு பிரிவில் 17 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு நடைபெற்ற போட்டியில் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி தங்கம் ரூபினி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்த மாணவியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன், தலைமையாசிரியா் சுகந்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். தங்கம் வென்றதன் மூலம் மாணவி தங்கம் ரூபினி தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT