மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 26,579 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.26.69க்கும், அதிகபட்ச விலையாக ரூ.30.89க்கும், சராசரி விலையாக ரூ.29.86க்கும் ஏலம் போனது.
மொத்தம் 10 ஆயிரத்து 129 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 136க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.