அறச்சலூா் விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் மறைமுக ஏலத்தில் ரூ. 72 ஆயிரத்துக்கு விற்பனையானது.
அறச்சலூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,753 காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 25.40க்கும், அதிகபட்சமாக ரூ. 31.69க்கும், சராசரி விலையாக ரூ. 30.39க்கும் விற்பனையாயின. மொத்தமாக 2,568 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 72,597க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.