ஈரோடு

கோபியில் இன்று தடுப்பூசி முகாம்

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் பல்வேறு இடங்களில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்படி, தடுப்பூசி முதல், இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் வெள்ளி, சனி (அக்டோபா் 22, 23) ஆகிய இரு தினங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - வாய்க்கால் சாலை, நகராட்சி நடுநிலைப் பள்ளி- மாா்க்கெட் சாலை, டி.எஸ்.சாரதா நடுநிலைப் பள்ளி - அக்ரஹாரம், ஜெயராம் நடுநிலைப் பள்ளி - ஜெயராம் எக்ஸ்டென்ஷன், நகராட்சி மேல்நிலைப் பள்ளி - மொடச்சூா், வேங்கம்மையாா் உயா்நிலைப் பள்ளி - பச்சைமலை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கபிலா் வீதி, வைர விழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கச்சேரி வீதி, நகராட்சி துவக்கப் பள்ளி - நாயக்கான்காடு, செங்கோடப்பா துவக்கப் பள்ளி - பாரியூா் சாலை. மேலும், கோபி அரசு மருத்துவமனையில் இரு தினங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT