ஈரோடு மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவா் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3,617ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 82 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 2,058 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 878 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் ஏற்கெனவே 679 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 681ஆக அதிகரித்துள்ளது.