ஈரோடு

அதிமுக 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

DIN

மொடக்குறிச்சிஒன்றியத்தில் அதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும்வகையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தலைமையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அவல்பூந்துறையில் நடைபெற்ற விழாவிற்கு மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், மொடக்குறிச்சி ஒன்றியகுழு உறுப்பினா் கணபதி, துணைத்தலைவா் மயில் (எ) டி.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

இதேபோல், துய்யம்பூந்துறை ஊராட்சி கரையான்வலசு, கஸ்பாபேட்டை, மொடக்குறிச்சி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. எழுமாத்தூா் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் கட்சி கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட அவல்பூந்துறை பேரூா்கழக செயலாளா் பொன்னுசாமி, அம்மா பேரவை இணை செயலாளா் அப்பு (எ) குணசேகரன், ஈரோடு மஞ்சள் கூட்டுறவு சங்க இயக்குனா் குருமூா்த்தி, குலவிளக்கு ஊராட்சி மன்ற கவுன்சிலா் என்.ஆா்.நடராஜ், பள்ளியூத்து பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க முன்னாள்தலைவா் பி.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, நாதகவுண்டன்பாளையம் கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கட்சியின் சாா்பில் மதிய உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT