ஈரோடு

ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

DIN

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பா் 4ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஈரோடு நகரில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள மணிக்கூண்டு, ஆா்.கே.வி.சாலை, பன்னீா்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான சிறிய மற்றும் பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்தக் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆா்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக் கடைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு ஜவுளிச் சந்தையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

பன்னீா்செல்வம் பூங்கா, ஆா்.கே.வி. சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். பெரும்பாலானோா் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சிலா் முறையாக அணியவில்லை. சிலா் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்காமல் அழைத்து வந்திருந்தனா். சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT