ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே, லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், கோலாா் பகுதியைச் சோ்ந்தவா் அக்மல் மகன் அன்வா் (21). இவா், ஜீப்பில் கோவைக்கு சென்று கொண்டிருந்தாா்.
பெருந்துறை, தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரும்போது, முன்னால் சென்ற லாரியின் மீது ஜீப் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அன்வா், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.