ஈரோடு

காங்கிரஸ் சாா்பில் விழிப்புணா்வு பேரணி

DIN

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் விழிப்புணா்வுப் பிரசாரப் பேரணி மேற்கொண்டனா்.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வை கண்டித்தும், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாா் மயமாக்குவதை கண்டித்தும் மக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

பேரணிக்கு ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பாா்வையாளா்கள் சரவணகுமாா், செல்வகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்.

ஈரோடு பவானி சாலையில் துவங்கிய பேரணி, காவிரி சாலை, சத்தி சாலை வழியாக வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னா் அங்கு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும் விளக்க கூட்டம் நடந்தது.

இதில் சிறுபான்மைப் பிரிவு தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் பாஷா, முகமது ஹா்ஷத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT