மாதாந்திர உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை பெற, விண்ணப்பிக்க, பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை மாதாந்திர உதவித் தொகை கிடைக்கப் பெறாத, பெருந்துறை பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.