ஈரோடு

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து விழிப்புணா்வு

1st Nov 2021 11:58 PM

ADVERTISEMENT

பெருந்துறை: சென்னிமலை தீயணைப்பு நிலையம் சாா்பில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, தீத்தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை, கொமரப்பா செங்குந்தா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,

சென்னிமலை தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமை வகித்தாா். தீயணைப்பு வீரா்கள் மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். மேலும், விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகளிடம் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT