ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சித்தோடு ஆா்.என்.புதூா், ஜவுளி நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (59). இவரது மனைவி இந்திராணி. இவா்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு ஜூலை 26ஆம் தேதி சென்றுள்ளனா். வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, உடமைகள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி, ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தைக் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் தடய அறிவியல் துறையினா் வீட்டுக்குள் தடயங்களைச் சேகரித்தனா். சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT