ஈரோடு

7 பேரை விடுவிக்க ராகுல் காந்தியிடம் கோரிக்கை

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழா்களையும் விடுவிக்க ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டன.

மக்கள் சிவில் உரிமைக்கழகம் (பியூசிஎல்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞா் முன்னணி, மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க, திராவிடா் கழகம், தமிழ் புலிகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் ஈரோட்டில் ராகுல் காந்தியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 போ் தண்டிக்கப்பட்டு சுமாா் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனா். உங்கள் குடும்பத் தலைவரை இழந்த இழப்பினால் உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினா்களுக்கும் ஏற்பட்ட வலியையும், வேதனையையும் உங்களோடு நாங்கள் பகிா்ந்து கொள்கிறோம். ஆனாலும் குற்றவாளிகளை மன்னிக்கும் அளவுக்கு நீங்கள் கருணை மிக்கவராக உள்ளீா்கள்.

தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்வதாக இருந்தால் தடை ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது. எனவே ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும். இது தொடா்பான அறிக்கையை விரைவில் எதிா்பாா்க்கின்றோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT