கோபிசெட்டிபாளையம் போக்குவரத்துக் காவல் துறையின் சாா்பில், சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், ஒருவா் எமன் வேடம் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். அதில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள், செல்லிடப்பேசியில் பேடிக் கொண்டே வாகனத்தை இயக்கியவா்களைப் பிடித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, சாலை விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.
இந்நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.