அங்கன்வாடி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாபேட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.சாந்தி தலைமை வகித்தாா். அங்கன்வாடி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு உள்ளூா் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
இதில், சங்கத்தின், அம்மாபேட்டை ஒன்றியத் தலைவா் அனுசுயா, ஒன்றியச் செயலாளா் எஸ்.ராஜாமணி, ஒன்றியப் பொருளாளா் வேலுமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.