பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். 42 பேருக்கு இந்திரா காந்தி தேசிய முதியோா் உதவித் தொகை, 26 பேருக்கு இந்திரா காந்தி தேசிய விதவை உதவித் தொகை, 9 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, 10 பேருக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை, 29 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல் என மொத்தம் 116 பேருக்கு ரூ. 10 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வழங்கிப் பேசினாா்.
இதில், பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.பழனிசாமி, அதிமுக மாவட்ட இலக்கிய அணித் தலைவா் அருள்ஜோதி செல்வராஜ், ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.