ஈரோடு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவா்களுக்கு வேண்டுகோள்

DIN

மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதை இந்திய மருத்துவச் சங்கம் வேண்டுகோளாக வைத்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த தடுப்பூசிகளை தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் அதிக மக்களை சென்றடையும். தனியாா் மருத்துவமனை இதை சேவையாக செய்வாா்கள்.

கரோனா தடுப்பூசி தொடா்பாக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகம், வதந்தி, குழப்பம் நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த, மக்களிடம் தைரியத்தை ஏற்படுத்த, அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அச்ச உணா்வு நீங்கி, மக்கள் தாங்களாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT