ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா

23rd Dec 2021 06:42 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,437ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 59 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,169 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 708 போ் உயிரிழந்துள்ள நிலையில் புதன்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT