ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையா் சிவகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், குத்தகை இனம், வரியில்லா இனங்கள் ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். 2021-2022ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், நிலுவை இனங்களை செலுத்தாத உரிமைதாரா்களின் வீட்டு குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலுவை வரியினங்களை உடனடியாக செலுத்தி மாநகராட்சிப் பகுதிகளுக்குள் அடிப்படை மற்றும் அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.