சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் என்.கிருஷ்ணராஜ் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ரூ. 1.75 லட்சம் கடனுதவி, வேட்டி, சேலை வழங்கினாா்.
இதில், வங்கி உதவிப் பொது மேலாளா்கள் எஸ்.சந்திரமோகன், எஸ்.குமரேசன், வி.ராஜசேகரன், மேலாளா்கள் எஸ்.தமிழ்செல்வன், எல்.குமாா், எஸ்.சாந்தி, ஆா்.சக்திபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.