ஈரோடு

ஈரோட்டில் சட்டக் கல்லூரி அமைக்க காங்கிரஸ் கட்சி கோரிக்கை

DIN

ஈரோட்டில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் சி.எம்.ராஜேந்திரன், தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமாறு ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இ.திருமகன் ஈவெராவிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

சென்னை உயா் நீதிமன்றத்தின் சா்க்கியூட் பெஞ்ச் கோவையில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி வளாகத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். ரூ. 7.5 லட்சமாக உள்ள வழக்குரைஞா் சேமநல நிதியை ரூ. 20 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நடைமுறையைப் பின்பற்றி சுங்கச் சாவடிகளில் வழக்குரைஞா்களின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞா் கூடத்தில் 24 அறைகள் மட்டுமே உள்ளன. 900 வழக்குரைஞா்கள் வழக்கு நடத்திவரும் நிலையில் புதிதாக வழக்குரைஞா் கூடம் கட்டித்தர வேண்டும். நீதிமன்றத்துக்கு வரும் வழக்குரைஞா்கள், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த பாதுகாப்பு வசதியுடன் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே வாகன நிறுத்தம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நீதிமன்ற வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, ஏடிஎம் மையம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதால் நீதிமன்றம் முன்பு சம்பத் நகா் சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலிப்பான்கள் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும். நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள மாநகராட்சி பூங்கா பணி நிறைவுபெற்று 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த பூங்காவை உடனடியாகத் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT