ஈரோடு

திருட்டுபோன 57 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

திருட்டுபோன 57 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் பங்கேற்று திருட்டுபோய் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். இதன் மதிப்பு ரூ. 9 லட்சத்து 18 ஆயிரத்து 678.

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை காணாமல், திருட்டுபோன என மொத்தம் 158 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதன் மதிப்பு ரூ. 25 லட்சத்து 48 ஆயிரத்து 154.

நிகழ்வில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி ஜானகிராமன், தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளா் செல்வி மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT