காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை நீண்ட இடைவெளிக்குப் பின்னா் பக்தா்கள் பரிகார வழிபாடு, மூத்தோா் சடங்குகள் நடத்த புதன்கிழமை முதல் திறக்கப்படுகிறது.
கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், கூடுதுறையைத் திறக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கூடுதுறையில் புதன்கிழமை முதல் பரிகார வழிபாடுகள் நடத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறித்துள்ளது. இருந்தபோதிலும், மூத்தோா் வழிபாடு, பரிகார பூஜைகளுக்கு அதிகபட்சம் 5 போ் வரை மட்டுமே செல்ல வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் நிா்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பக்தா்கள், புரோகிதா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.