ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 126 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,525ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 9 போ் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 6,516ஆக மாறியது. இதனிடையே செவ்வாய்க்கிழமை 126 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6,642ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 126 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 6,642 பேரில் இதுவரை 5,454 போ் குணமடைந்துள்ளனா். 1,100 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை வரை 84 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண், 75 வயது ஆண், 67 வயது ஆண் என 4 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 88ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT