ஈரோடு

புறத்தொடா்பு பணியாளா் பணி: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

DIN

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடா்பு பணியாளா் பணியிடத்துக்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடா்பு பணியாளா் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்ற குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளா் துறை ஆகியவற்றில் ஒரு ஆண்டு பணி அனுபவம் உள்ள 40 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்படுபவா்களுக்குத் தொகுப்பூதியமாக மாதம் ரூ. 8,000 வழங்கப்படும். பணியிடம் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம். இதை அடிப்படையாகக் கொண்டு எவ்விதத்திலும் அரசுப் பணி கோர இயலாது.

விண்ணப்பத்தை அக்டோபா் 7ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 69 காந்திஜி சாலை, முன்னாள் படைவீரா் மாளிகை (இரண்டாவது தளம்), ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0424-2225010 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT