ஈரோடு

காவலா் பணிக்கான போட்டி தோ்வுக்கு இலவசப் பயிற்சி

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் நடத்தும் காவலா் பணியிடங்களுக்கான தோ்வுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இலவச பயிற்சி வகுப்புகளை இணையவழியில் நடத்தவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வாயிலாக இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய 10,906 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு செப்டம்பா் 17ஆம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு இணையவழி விண்ணப்பப் பதிவேற்றம் செப்டம்பா் 26ஆம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பத்தை அக்டோபா் 26ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். டிசம்பா் 13ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும்.

இந்தத் தோ்வு எழுதுவோருக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 1ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. எனவே, இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ளவா்கள் இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ, 0424-2275860 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்.

இப்போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சாா்ந்த அனைத்து விண்ணப்பதாரா்களும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT