8 பயனாளிகளுக்கு புல் அறுக்கும் எந்திரத்தை எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம் வழங்கினார்.
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மேட்டு கடையில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் ரூ.2.56 லட்சம் மதிப்பில் 8 பயனாளிகளுக்கு புல் அறுக்கும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஆவின் துணை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கே.ஸ் தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கே.வி. ராமலிங்கம் எம்.எல்.ஏ பயனாளிகளுக்கு புல் அறுக்கும் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கினார்.
பகுதி செயலாளர்கள் கே .சி. பழனிச்சாமி கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், ஜெயராஜ், கோவிந்தராஜ் ,ராமசாமி, தங்கமுத்து ஊராட்சி மன்ற தலைவர் மோகன பிரியா சின்னசாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.