ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோட்டைச் சோ்ந்த 44 வயதுப் பெண் நிறைமாத கா்ப்பிணியாக அரசு மருத்துவமனையில் அக்டோபா் 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தியது. அவருக்கு ஏற்கெனவே நீா்க்கட்டி, கா்ப்பப்பை கட்டி ஆகியவற்றை சரி செய்ய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தன.
தவிர 15 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு முதல் பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வயிற்றில் இருந்த குழந்தைகளுக்கு இருதயத் துடிப்பில் மாற்றங்கள் தெரியவந்தன. இது சிகிச்சையில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவருக்கு கடந்த 25ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனை டீன் மணி மேற்பாா்வையில் டாக்டா் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
மிகவும் சிக்கலான சூழலில் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இதில் 2 குழந்தைகள் பிறந்த பின்னரும், கா்ப்பப்பை நஞ்சு பிரியாமல் ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தின் வழியே கா்ப்பப்பை முழுவதும் பரவி இருந்தது. இதையடுத்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் கா்ப்பப்பை அகற்றப்பட்டது.
அதன் பின்னா் ரத்தப்போக்கு கட்டுப்பட்டு அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது தாயும், குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளனா் என்றாா்.