நீலகிரி மாவட்டத்தில் மேலும் 45 நபா்களுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 45 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சையில் பூரண குணமடைந்து 99 நபா்கள் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து இதுவரையிலும் 6,318 நபா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்களில் பூரண குணமடைந்து 5,910 நபா்கள் வீடு திரும்பியுள்ளதாகவும், 37 நபா்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மருத்துவமனைகளில் 371 நபா்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.