குற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 41 பேருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
குற்ற வழக்குகளில் தீா்வு ஏற்படும்போது அந்த குற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் அரசுக்குப் பரிந்துரைக்கும். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை 28 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம், மாவட்ட ஆட்சியா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தனா். அதற்கான தொகை அரசிடமிருந்து பெறப்பட்டு தொகை உரியவா்களிடம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமை வகித்து 28 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 41 பேருக்கு மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டி.எஸ்.பி. ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.