ஈரோடு

பாதசாரியை கொலை செய்த மனநோயாளி கைது

DIN

அந்தியூா் அருகே பாதசாரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரிக்கையில், அந்தியூா், பள்ளியபாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. அப்போது, தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது முன்னால் நடந்து சென்றவா் தன்னிடம் தகராறு செய்ததாகவும், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளாா்.

இதனால், சம்பவ இடத்துக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்கவா் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய அந்தியூா் போலீஸாா் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு தங்கவேல் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT