பெருந்துறை: சென்னிமலை ஒன்றியம், வரப்பாளையம், கூத்தம்பாளையம், சிறுக்களஞ்சி ஆகிய ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 77.16 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று தாா் சாலைகள் அமைக்கும் பணிகளைத் துவக்கிவைத்தாா்.
இதில், சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் மணிமேகலை, சென்னிமலை ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரத்தினம் மணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பழனிச்சாமி, சுசிலா சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.