கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சாலைகளில் சென்றவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் தலைமையிலான குழுவினா்
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, முகக் கவசம் அணியாமல் சாலையில் சென்ற 9 நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் ரூ.1800 அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னா், அவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.